பெண்ணே! விடலை பருவத்தில் ஆசையை சுமந்தாய்.
கன்னி பருவத்தில் காதலை சுமந்தாய்.
அன்னை பருவத்தில் சிசுவை சுமந்தாய்.
மனைவி உருவத்தில் கணவனை சுமந்தாய்.
இத்தனையும் சுமக்கும் இந்த பெண்மையை
எல்லா ஆண்களின் சார்பாக நான் சுமக்க வேண்டுகிறேன்.
மனித குலத்தில் இன்ப துன்பம் சாதாரணம்.
ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்மைக்கு வருவது தீரா ரணம்.
பெண்ணுக்கு அரசு குடுத்த சதவிதம் முப்பத்தி மூன்று.
இப்பூவுலகில் இன்னும் மழை பெய்ய பெண்மையே சான்று.
மனிதா! முதலில் பெண்மையை நேசி.
அதன் மூலமே நமக்கு கிட்டும் ஆண்டவனின் ஆசி.
கவிதை ஒன்று எழுதலாம் என்று தனிமையில் அமர்ந்தேன்.
தலைப்பு ஒன்றுக்காக பல நேரம் யோசித்தும், ஒன்றும் கிட்டவில்லை,
தாய்மை என்ற ஒரு மகத்துவம் என் புத்திக்கு எட்டவில்லை.
எடுத்தேன் பேனாவை என் கையோடு,
வடித்தேன் எழுத்துக்களை பொய்யின்றி மெய்யோடு.
அம்மா, என் உடல் தந்து, உயிர் தந்து, தாய் என்னும் பெயர் கொண்டாய்,
உடல் பெற்று,உயிர் பெற்று உனக்கு நான் தந்தது என்னவோ?
இதை எண்ணி நான் வெட்கி தலை குனியும் நேரம்,என் தாய்,என் தலை நிமிர்த்தி,
தன் முகத்தில் சிறு புன்னகை இட்டாள்,
அதன் மூலம், தாய்மை எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை என்று எனக்கு உணர்த்தி விட்டாள்.
மேல் இருப்பவன் இறைவன் என்றாலும், தாய்மை உணர அவன் மகன் இல்லை,
கீழே நான் மனிதன் என்றாலும்,இங்கு நான் ஒரு தாய்க்கு பிள்ளை.
ஆசையோடு ஆரம்பித்தேன் இக்கவியை,
பொறுமையில் நீ மிஞ்சி விட்டாய் இப்புவியை.
சேய் மனம் கறை பட்டாலும், தாய் மனம் கறை காணாது,
தாய்மை கவிதையை நிறைவு செய்ய எண்ணினால், எவர்க்கும் ஒரு பிறவி போதாது.